Written by இந்துமதி
|
Friday, 25 January 2013 06:27 |
இத்தனை சிறிய கூண்டுதான் அத்தனை பெரிய பிரபஞ்சத்தின் 'அகலமே' என்பது இவர்களின் நிஜம் !
சூரியன் அடைபட்டால் தான் இரவென்பதல்ல ..., வீட்டுக்கதவு அடைக்கபட்டால் கூட இவர்களது நாள் இருளிற்கு நகர்கிறது !
இவர்களுக்கு உணவிடும் வேளையில் , உலகத்தின் மற்றவர்களும் உணவருந்துவார்கள் என்பது இவர்களின் கணிப்பு !
தான் கீச்சிடும் சத்தம் கேட்டு தான் உலகமே விழித்துக்கொள்கிறது என்பதில் இவர்களுக்கு பெருமிதம் !
தன் கூண்டைத்தாண்டி வீட்டில் வாழும் எவருக்கும் தன்னுடலைப்போல நிறங்களின் வண்ணகலவையில்லை என்பதில் இவர்களுக்கு பேரானந்தம் !
தனினத்தவரைப் போலவே மற்றவர்களுக்கும் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லையோ என்ற கற்பனையுலகம் தான் இவர்களின் ஒரே ஆறுதல் !
தனக்கு விதிக்கப்பட்டுள்ள அத்தனை சிறிய கூட்டுக்குள்ளும் கூட அனைத்துலக சந்தோஷத்தையும் ரசித்து வாழும் 'இவர்கள் -இவைகளல்ல ' !!!
|
Last Updated on Friday, 25 January 2013 06:30 |