Home Jokes
Jokes


ஜோக்ஸ் PDF Print E-mail
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா   
Wednesday, 16 May 2012 08:10

ஜோக்ஸ்

"டார்லிங், நாம ஊரவிட்டு ஓடிப்போற விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே எப்படி?
" சந்தோஷத்துல என் புருசன் தண்ணியடிச்சுகிட்டு யார்கிட்டயாவது சலம்பியிருப்பார்!"

 

*******************************

 

 

நகர்வலம் போவதாகச் சொல்லிவிட்டு மன்னர் அந்தப்புரத்தை சுற்றி சுற்றி வருகிறாரே !’’
‘’ இது பிகர் வலமாம்!’’
ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்தது.


*******************************

 


‘’ எப்பிடியோ ஒருவழியாக புறமுதுகிட்டு ஓடி தப்பித்து வந்து விட்டீர்கள் மன்னா!’’
‘’ அது இருக்கட்டும், அசந்து தூங்கிகிட்டு இருந்த என்ன போர்க்களத்துக்கு தூக்கிகிட்டு போனது யாரு?’’
ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்தது.

************************

 

ஆனி போய் ஆடி போய் ஆவணி வந்தா அவன் டாப்பா வருவான்!’’

அவன் டூப்பாத்தான் வருவான், பாரு இப்பவே சினிமாவுல வர்ற சண்டைக்காட்சிகள விடாம பார்க்கிறான்!’’

****************

`` சில பேருக்கு தூக்கத்துல நடக்குற வியாதி வரும், ஆனா நம் மன்னருக்கு வேற மாதிரி வியாதி வந்திருக்கு!’’

`` என்ன வியாதி?’’

`` தூக்கத்துல ஓடுற வியாதி!’’

****************


``மன்னா தங்களின் மிக நளினமான ஓட்டத்தைக்காண எதிரி மன்னனுக்கு ஆசை வந்துவிட்டது!’’

`` என்ன அமைச்சரே சொல்கிறீர்!’’

`` எதிரி மன்னன் படையெடுத்து வருவதாக ஓலை அனுப்பியிருக்கிறான் மன்னா!’’


****************

`` மன்னா எதிரி மன்னன் படையெடுத்து வருகிறான்!’’

`` மன்னருக்கு இப்போ பி.பி,சுகர் ரொம்ப அதிகமா இருக்காம் ஆனி போய் ஆடிபோய் ஆவணி வந்தா உடல்நிலை சரியாயிடும் அப்போ படையெடுத்து வந்தாப்போதுமுன்னு போய்ச்சொல்லு!’’

****************




அமைச்சரே நான் புறமுதுகிட்டு ஓடி வருவது ஒருபுறம் இருந்தாலும் நம் அரண்ம
னைக்குள் நுழையும்போது தாரை தம்பட்டை அடித்து என்னை வரவேற்பதுபோல் ஒரு சித்திரம் வரையவேண்டும்!’’

``எதற்க்கு மன்னா!’’

`` வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!’’

****************



`` அமைச்சரே வாழ்க்கையில் ஒருமுறையாவது எதிரி மன்னனை வெல்லவேண்டும்!’’

`` இதுக்கு ஆசையப்பாரு!’’


****************

 

“ நடிகை லட்சுமிராய்யைப் பார்த்து டோனி விழுந்து விழுந்து சிரிக்கிறாரே! ஏன்?”

“ கிரவுண்ட விட்டு வெளியே போன பால தூக்கி போடுன்னு சொன்னதுக்கு அரோமா பாக்கெட் பால தூக்கி போட்டுட்டாங்களாம்!”

***************


”எதுக்கு எதுக்கு இலவசமுன்னு விளம்பரம் பண்றதுக்கு ஒரு விவஸ்தையே இல்லாமப்போச்சு!”

” ஏன் என்னாச்சு!”

நடிகை நமீதாவோட படத்தப் பார்த்தா கனவுல இலவசமா வருவாங்கன்னு விளம்பரம் பண்ணுறாங்க!”

 

***************


“ உன்ன எங்க வீட்டு ராணி மாதிரி வெச்சுக்குவேன்னு தலைவர் சொன்னத நம்பி ஏமார்ந்துட்டேன்!”

” ஏன் என்னாச்சு!”

” ராணியிங்கற பொண்ணு அவர் வீட்டு வேலக்காரிடீ!”

 

 

***************



‘’ பதவியில இருக்கிறப்போ பலரையும் சுரண்டி வாழ்ந்த நம்ம தலைவர் இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கார்?”

‘’ செல்போன் ரீ-சார்ஜ் கர்ர்ட சுரண்டிகிட்டு இருக்கார்.”



***************



”காலங்காத்தால பல்பொடி கம்பனி முன்னால எதுக்கு எல்லாரும் வரிசையா நிக்கறாங்க?”

“ பல்பொடி விற்கப்படுமுன்னு எழுதுறதுக்கு பதிலா பால்பொடி விற்கப்படுமுன்னு எழுதியிட்டாங்களாம்!”


***************




“ நான் கட்டிக்கப்போற பொண்ணுக்கு அண்ணன் தம்பி கிடையாது, இருந்திருந்தா என்ன மச்சான்னு கூப்பிட்டிருப்பாங்க!”

“ நடிகை நமீதாவ கட்டிக்க, அவங்களே உன்ன மச்சான்னு தாராளமா கூப்பிடுவாங்க!”


***************


” இந்த படத்துல நீங்க கொஞ்சம் கூட நடிக்கவே இல்ல!”

“ கதை யதார்த்தமுன்னு சொன்னாங்க, அதுல எப்பிடி நடிக்க முடியும்



***************

“ திருட வந்த என் கால்ல விழுந்து பீரோ சாவி தர்றீயே ஏன்?”

“ நீங்க தானே மரியாதையா பீரோ சாவிய குடுன்னு கேட்டீங்க

 

***************

"மன்னர் ஏன் புலவரை நையப் புடைக்கிறார்?''
" கொற்றவா, புறமுதுகிட்டு ஓடிவர கற்றவான்னு பாட்டு எழுதி வந்துட்டாராம்!''
******
" நிலவுல நாம எப்போ போகப்போறோமுன்னு மன்னர் அடிக்கடி கேட்கிறாரே ஏன்?''
" எதிரி மன்னன்கிட்டயிருந்து தப்பிச்சு கொஞ்ச நாள் அங்க போய் ஒழிஞ்சிருக்கலாமுன்னுதான்!''
****************

" மன்னா இந்த முறை போர்களத்துலயிருந்து புறமுதுகிட்டு ஓடிவந்து தப்பிக்க முடியாது!''
" ஏன் முடியாது?''
" எதிரி மன்னன் இந்த முறை நம் அரண்மனை முன்பு போர்க்களம் அமைக்க திட்டமிட்டுள்ளானாம்''
******************
" மன்னா எதிரி மன்னன் சேரன் செங்குட்டுவன் ரொம்ப பொல்லாதவர், புறமுதுகிட்டு ஓடினால் அவரும் ஓடி வந்து தங்கள் தலையில் ணொங்கென்று கொட்டிவிடுவார்''
" அதனாலதான் அவர் பெயர் சேரன் செங்-குட்டுவனா!''
**************
" இளவரசர் அந்தப்புரம் நுழையிறப்போ புது சினிமா பாட்டு பாடிகிட்டு போறாரே என்ன பாட்டு?''
" டாடி மம்மி வீட்டில் இல்ல, தட போட யாருமில்லங்கற பாட்டுத்தான்!''
****************
" செய்தி ஓலை இப்படி கனக்கிறதே அப்படியென்ன அந்த புறமுதுகுப்புலி எழுதியுள்ளான்!''
" போரை தவிர்க்கவும் ங்கற சின்ன விசயத்த நிறைய அடித்தல் திருத்தலோட எழுதி முடிக்கிறப்போ ஓலை அதிகமாச்சு மன்னா!''
***************
" நம் மன்னரின் கோபம் இன்னும் அடங்கவில்லை!''
" ஏன், என்ன நேர்ந்தது?''
" புறமுதுகிட்டு ஓடி வரும்பொழுது மன்னர் கால் இடறி விழுந்துட்டாராம், அவர தாண்டி ஓடுன வீரர்கள் யாரும் அவர கண்டுக்கலையாம்!''
***************
" நம்ம மன்னருக்கு நாய் அடி, பேயடி, பாய் அடி கிடைச்சுதாம்!''
" அதென்ன பாய் அடி?''
" ஒருநாள் மட்டும் மகாராணிய பாயில படுக்கச் சொல்லீட்டு மன்னர் கட்டுல்ல படுத்தாராம், மகாராணி பாயாலே சாத்து சாத்துன்னு சாத்திட்டாங்களாம்!''
**************
" மன்னா பஸ்ஸுலதான் ரிவேர்ஸ் வரமாட்டீங்க, போர்களத்திலயுமா, வாங்க ஓடியிடலாம்!''
" நல்ல வேள ஞாபகப்படுத்தின, இந்தா ஓட ஆரம்பிச்சுட்டோமுல்ல!''
**************
" நமது மன்னர் நடிகர் விஜய்ய சந்திக்கனுமுன்னு விருப்பப்படுறாரே ஏன்?''
" வில்லு மாதிரி வந்து எதிரி மன்னன போட்டுதள்ள முடியுமான்னு கேட்கிறதுக்குத்தானாம்!"

***************

" ஆற்காட்டார் கத்திய தூக்கிகிட்டு மீன் சந்தைக்கு போறாரே ஏன்?"
" மின்வெட்டு இருக்கிறப்போ மீன்வெட்டும் இருக்கட்டுமேன்னுதானாம்!"
***************
" தலைவர் ஏடாகூடமா கேள்வி கேட்டு வம்புல மாட்டிகிட்டாரு!"
" அப்படி என்ன கேட்டுட்டார்!"
" பிரிஞ்சிருந்த ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர்ந்திடிச்சு, ரெண்டு டீ.வி எப்போ ஒண்ணு சேரப்போவுதுன்னு கேட்டுட்டாராம்!"
*****************
" எதுக்கு அந்த காமடி நடிகர ஹீரோயின் போட்டு அடிக்கிறாங்க?"
" தனக்கு சிக்ஸ் பேக் இருக்குன்னு சொல்றதுக்கு பதிலா செக்ஸ் பேக் இருக்குன்னு சொல்லீட்டாராம்!"
****************
" எனக்கு புடிச்ச நடிகை ஷா ஷா ஷா ன்னு மூணு தடவ எழுதியிருக்கியே யாருப்பா அந்த நடிகை!"
" த்ரி-ஷா தான்”

 

" போஸ்ட் மாஸ்டர் பொண்ண காதலிச்சது தப்பாப் போச்சு!"
" ஏன் என்னாச்சு?"
" லேசா ஒரசினா ஸ்டாம்பு மாதிரி ஒட்டிக்கிறா!"
****************

‘’ இப்பொழுது மழை எதுவும் இல்லை, பிறகெதுக்கு குடை ரிப்பேர் காரன் அரண்மனைக்குள் வந்துள்ளான்?’’

‘’ நமது வெண்கொற்றக்குடையிலிருக்கும் ஓட்டையை பார்த்திருப்பான் மன்னா!’’

 

*******************

 

‘’ புற வழிச்சாலையின்னு அறிவிப்பு பலகை இருந்தத மாற்றி புறமுதுகுச்சாலையின்னு எழுதியிருக்கிறாங்களே! ஏன்?’’

’’ வழக்கமா மன்னர் இந்த வழியாத்தான் புறமுதுகிட்டு ஓடி வருவாராம்!’’

 

**************************
‘’ இருமலுக்கு டாக்டர் ஊசி போட்டப்போ லொக்கு லொக்குன்னு இருமுன தாத்தா நர்ஸ் நமீதா ஊசி போட்டதும் வேற மாதிரி இருமுறாரு!’’
‘’ எப்பிடி?’’
‘’ லக்கு லக்குன்னு இருகுறாரு”

*******************************************************************************************************************

Last Updated on Sunday, 17 June 2012 07:50
 
ஜோக்ஸ் PDF Print E-mail
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா   
Wednesday, 02 May 2012 16:09

ஜோக்ஸ்

-பூங்காவுல காதலர்கள் கிட்ட ஓட்டு கேட்கப்போன தலைவர திட்டி அனுப்பிட்டாங்களாமே ஏன்?


ஓட்டு கேட்கப்போன தலைவர் காதலர்கள் என்ன பேசிக்குறாங்கன்னு ஒட்டு கேட்கவும் செஞ்சுட்டாராம்!’’

****************

தலைவர் தன்னோட அல்பத்தனத்தை இன்னமும் விடவே இல்ல!’’

``எப்படிச் சொல்ற..?’’

`` தேர்தல் முடிஞ்சு மீதமான மையை தன்னோட பேனாவுல ஊத்த முடியுமான்னு கேட்கறார்!’’

 

-நன்றி குங்குமம்

 

 

 

 

 

 

Last Updated on Sunday, 17 June 2012 22:19