Home
சண்டை PDF Print Email
Written by   
வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012 08:37
There are no translations available.


மாலாவுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. மாமியார் ஜெயந்தி சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபித்துக்கொண்டாலும் சண்டை எதுவும் பெரிதாய் இதுவரை நடக்கவில்லை.
அன்று மாலை நான்கு மணிக்கு மாலாவுக்கும் ஜெயந்திக்கும் சண்டை பற்றிக்கொண்டது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சண்டை பின்பு அடங்கியது.
மாலாவின் கணவன் கார்த்திக் அலுவலகம் முடிந்து வீடு வந்தபோது வீடு அமைதியாக இருந்தது. பக்கத்து வீட்டு அனுராணிக்கு அது ஏமாற்றமாக இருந்தது.
கார்த்திக் வந்ததும் மாலா தனது நடந்த சண்டையைச்சொல்லி மாமியாரை பற்றி கோள் மூட்டுவாள், அதுபோல ஜெயந்தியும் கார்த்திக்கிடம் மாலாவைப்பற்றி குறை சொல்ல கார்த்திக்கு யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் தலையை பிய்த்துக்கொள்வான் என்று எதிர்பார்த்த அனுராணிக்கு மாமியாரும் மருமகளும் சந்தோஷமாக கார்த்திக்கிடம் பேசிக்கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.
மறுநாள் ஜெயந்தியிடம் நேரடியாகவே கேட்டாள் அனுராணி.
``நானும் என் மருமகளும் சண்டை போட்டோம் அத அப்பவே மறந்துட்டோம், அதுவுமில்லாம அத கார்த்திக்கிட்ட நானும் என் மருமளும் சொன்னா அவன் நிம்மதி போயிடும் அதனால சண்டை நடந்ததப்பத்தி  அவன்கிட்ட மூச்சு விடுறதில்ல.’’ சொல்லிவிட்டு தனது மருமகளுக்கு தலைவாரிவிட சீப்புடன் சென்ற ஜெயந்தியை பொறாமையாய் பார்த்தாள் அனுராணி..

LAST_UPDATED2