Written by கவிஞர் வைதேகி பாலாஜி
|
Saturday, 29 September 2012 13:24 |
தேவையானவை
அரிசி - ஒரு டம்ளர் சிறு பருப்பு - கால் டம்ளர் மிளகாய் தூள் - அரை ஸ்பூன் மஞ்சள் தூள் , உப்பு - தேவையான அளவு பூண்டு - 2 துண்டு நெய் - ஒரு ஸ்பூன் எண்ணெய் - ஒரு ஸ்பூன் வெங்காயம் - 1 தக்காளி - 1
செய்முறை
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கருவேப்பிலை போட்டு , விழுதாக்கிய பூண்டையும் சேர்த்து வதக்கவும், பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள் , உப்பு , மிளகாய் தூள் சேர்த்து நெய் ஊற்றி கிளறவும். இரண்டரை டம்ளர் நீர் ஊற்றி கழுவிய அரிசியை அதில் போட்டு குக்கரை மூடி வேக விடவும் இரண்டு அல்லது மூன்று விசில் வந்ததும் இறக்கவும். பரிமாறும்போது கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.
|
Last Updated on Saturday, 29 September 2012 13:40 |