Written by கவிஞர் வைதேகி பாலாஜி
|
Saturday, 29 September 2012 12:53 |
தேவையானவை
துருவிய கோஸ் - கால் கப் உப்பு - தேவையான அளவு பஞ்சை மிளகாய் - 1 கடலை மாவு - 1/4 கிலோ எண்ணெய் - தேவையான அளவு சோடா மாவு - சிறிதளவு
செய்முறை
காய் துருவலில் பொடியாக கோசை தேங்காய் துருவல் போல சீவிக் கொள்ளவும் .கடலை மாவில் பொடியான கோஸ் , நறுக்கிய பச்சை மிளகாய் , உப்பு ,சோடா மாவு சேர்த்து பிசையவும் கோசிலேயே நீர் இருப்பதால் முதலில் மாவில் நீரை ஊற்ற வேண்டாம் பிசைந்த பிறகு தேவையாக இருந்தால் நீர் சேர்க்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு நெல்லிக்காய் அளவில் சிறு உருண்டைகளாக்கி பொரித்தெடுக்கவும் . கோஸ் பயன்படுத்தி சுட்ட போண்டா என்பதை நீங்கள் சொன்னாலும் நம்ப மாட்டார்கள் அதுமட்டுமல்ல இவ்வளவு மென்மையான போண்டாவை இதற்கு முன்பு நீங்களும் சாப்பிட்டிருக்கமாட்டீர்கள்.
|
Last Updated on Saturday, 29 September 2012 13:07 |