Written by கவிஞர் வைதேகி பாலாஜி
|
Thursday, 27 September 2012 12:35 |
தேவையானவை
முள்ளங்கி - 1 காய்ந்த மிளகாய் -2 உப்பு - தேவையான அளவு புளி - சிறு உருண்டை கடலைபருப்பு - 1 ஸ்பூன் உளுந்து - 1 ஸ்பூன் தேங்காய் துருவல் - ஒரு கப் எண்ணெய் - இரண்டு ஸ்பூன் பூண்டு - 4 துண்டு
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி , கடலைபருப்பு ,உளுந்து இரண்டையும் பொன்னிறமாக வறுக்கவும் பின் அதில் பூண்டை போட்டு வதக்கிய பிறகு துருவிய முள்ளங்கி தேங்காய் துருவல் ,மிளகாய் , சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் கடைசியாக புளியை சேர்க்கவும் பிறகு அதை அரைத்துக் கொள்ளவும் . வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
குறிப்பு
தேங்காய் துருவலை விரும்பாதவர்கள் கடலைபருப்பை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
|
Last Updated on Thursday, 27 September 2012 12:50 |